முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன அவர்களுக்குமுன் சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, இரு பிரதிவாதிகளும் பிணையில் செல்ல நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.