இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று (ஜூலை 2) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இலங்கை அணிக்கு சரித் அசலங்க தலைமை வகிக்கிறார், பங்களாதேஷ் அணிக்கு மெஹிடி ஹசன் மிராஸ் தலைமை தாங்குகிறார்.
இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2–0 என வென்று கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.