இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல் போயுள்ளனர் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நேரத்தில் கப்பலில் மொத்தம் 65 பேர் பயணித்துள்ள நிலையில், 23 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கப்பல், கிழக்கு ஜாவா மாநிலம் பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து பாலி தீவுக்கு புறப்பட்ட அரை மணி நேரத்திற்குள் கவிழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.