கொழும்பு – தேர்தல் ஆணையத்தின் அனைத்து மின் சேவைகளும் இன்று (07) முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இடைநிறுத்தம் செய்யப்பட்ட சேவைகள்:
- வாக்காளர் பட்டியல் தகவல்களைச் சரிபார்த்தல்
- ஆன்லைன் பதிவு
- வாக்காளர் அறிக்கைகள் பெறுதல்
- பிற மாவட்டங்களுடன் தொடர்புடைய தகவல்களைப் பெறுதல்
- அனைத்து சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை அணுக முடியாது எனவும், பொதுமக்கள் இந்த இடைநிறுத்தத்தால் ஏற்படும் அசௌகரியங்களை பொறுமையுடன் சகிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் சேவைகள் மீண்டும் வழமைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.