follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1எரிபொருள் விநியோகத்திற்கு நெருக்கடி - எச்சரிக்கும் பவுசர் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விநியோகத்திற்கு நெருக்கடி – எச்சரிக்கும் பவுசர் உரிமையாளர்கள் சங்கம்

Published on

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக சில தனியார் தரப்புகளுக்கு மாற்றும் முயற்சி இடம்பெற்று வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்தப்படின், நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்தில் பெரும் நெருக்கடி ஏற்படக்கூடும் என சங்கத்தின் பொருளாளர் ஜகத் பராக்கிரம தெரிவித்துள்ளார்.

“இதுவரை எரிபொருளை தொகை களஞ்சியசாலைகளிலிருந்து நாட்டின் பல பாகங்களுக்கு எடுத்து சென்றது எங்கள் பவுசர் உரிமையாளர்களே. ஆனால் தற்போது, எரிபொருள் போக்குவரத்தை சில நெருங்கிய வியாபாரிகளிடம் ஒப்படைக்க முயற்சி நடைபெற்று வருகிறது,”

“நாங்கள் ஒரு சங்கமாக இந்த மாற்றத்தை முந்தைய காலங்களில் தடுக்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால் இப்போது மீண்டும் அந்த முயற்சி தொடர்கிறது. கொழும்பு மற்றும் முத்துராஜவெலவிலிருந்து குருநாகல் முனையத்திற்கு எரிபொருள் கொண்டு செல்வதை டெண்டர் மூலம் ஒப்படைக்க திட்டமிடுகின்றனர்.”

சங்கத்தில் தற்போது 400–500 பவுசர் உரிமையாளர்கள் இருப்பதாகவும், பெரும்பாலானவர்கள் சிறிய அளவில் – ஒரு அல்லது இரண்டு வாகனங்களுடன் – தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய ஒப்படைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால், இது எரிபொருள் விநியோகத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.

“எரிபொருள் போக்குவரத்து சேவையை பொதுமக்கள் நலனுக்கேற்ப, வழக்கம் போல், பரந்த அளவிலான பங்குபற்றலுடன் இயங்க அனுமதிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...