follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1இவ்வருடம் மட்டும் இதுவரை 66 துப்பாக்கிச் சூடு – 37 பேர் பலி

இவ்வருடம் மட்டும் இதுவரை 66 துப்பாக்கிச் சூடு – 37 பேர் பலி

Published on

2025 ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து ஜூலை 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 37 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்களில் 48க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுகள் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாக இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

பணந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 5 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவை, பாதாள உலக உறுப்பினர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுமாகக் கருதப்படும் “குடு சலிந்து” மற்றும் “பாணந்துறை நிலங்க” ஆகியோருக்கிடையிலான ஆணவக் குழப்பங்களால் உருவான மோதல்களின் விளைவாக பதிவாகியுள்ளதாகவும், இதனால் குறித்த பிரதேசத்தில் அதிக அளவிலான துப்பாக்கிச் சூட்டுகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...