2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (14) முதல் ஜூலை 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஏற்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கூறியதாவது, இந்த ஆண்டின் பரீட்சை முடிவுகளின்படி 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும், இந்த ஆண்டில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 73.45% பேர் உயர் தரத்திற்கு தகுதியான தரங்களை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மீள் பரிசீலனைக்கு விரும்பும் மாணவர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் உரிய முறையில் விண்ணப்பிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.