follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1விலைச்சுருக்கத்தில் வித்தை - எரிபொருளுக்கான புதிய யோசனை

விலைச்சுருக்கத்தில் வித்தை – எரிபொருளுக்கான புதிய யோசனை

Published on

எரிபொருள் விலையை மேலும் குறைக்கும் நோக்கில், புதிய நடவடிக்கை ஒன்றை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நடவடிக்கையின் மூலக் குறிக்கோள், எரிபொருள் விநியோகஸ்தர்களின் பராமரிப்பு செலவுகளை குறைப்பதாகும்.

அதன்படி, எரிபொருள் விநியோகத்துக்கு பயன்படுத்தப்படும் பவுசர்களின் உதிரிப் பாகங்கள் மற்றும் பிற பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதன் மூலம் மொத்த செலவுகளை அடக்குவது திட்டமிடப்பட்டுள்ளது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விநியோகஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளதுடன், செலவைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அவர்கள் சம்மதம் வழங்கியுள்ளனர்.

இந்த நடவடிக்கையால் எரிபொருள் விநியோகச் சங்கிலியில் செலவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நேரடி பலன்கள் நுகர்வோருக்குப் பெரிதும் பயனளிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...