follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP2இலங்கை - கனடா முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் கனேடிய அரசாங்கத்தின் விசேட கவனம்

இலங்கை – கனடா முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் கனேடிய அரசாங்கத்தின் விசேட கவனம்

Published on

இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஸ் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோருக்கு இடையேயான சந்திப்பொன்று நேற்று (24) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

மக்களின் நம்பிக்கையை வென்ற மற்றும் ஊழல் இல்லாத புதிய அரசாங்கத்துடன் வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்த கனேடிய அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்த தூதுவர், இதற்காக கனேடிய வணிக சமூகம் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி, சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல், வர்த்தக கூட்டாண்மைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற ஒத்துழைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து சபைத் தலைவருடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்திய தூதுவர், இலங்கையின் எதிர்கால வளர்ச்சி செயல்முறைக்கு மேலும் ஆதரவை வழங்குவதாகவும் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மட்டக்களப்பில்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு...

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பலர் கைது

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக...

பாடசாலை பெயர்ப் பலகைக்கு மாத்திரம் 2.4 மில்லியன் செலவு ? – கோபா குழு வெளியிட்ட தகவல்

809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக்...