மேற்கிந்திய தீவுகள் – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 3ஆவது போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் 214 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான பிராண்டன் கிங், கேப்டன் ஷாய் ஹோப் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிராண்டன் கிங் 36 பந்தில் 62 ஓட்டங்கள் விளாசினார். ஷாய் ஹோப் 57 பந்தில் 102 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் 215 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அவுஸ்திரேலியா களம் இறங்கியது. மிட்செல் மார்ஷ் (22), மேக்ஸ்வெல் (20), ஜோஷ் இங்கிலீஷ் (15), கேமரூன் கிரீன் (11) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.