follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுகொழும்பில் 5 இடங்களில் குண்டுத் தாக்குதல் என்ற செய்தியில் உண்மையில்லை – பொலிஸார்

கொழும்பில் 5 இடங்களில் குண்டுத் தாக்குதல் என்ற செய்தியில் உண்மையில்லை – பொலிஸார்

Published on

கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின இருப்பினும் குறித்த செய்திகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை, தெஹிவளை, நுகேகொடை, கல்கிசை மற்றும் மிரிஹானை ஆகிய பகுதிகளில் இந்த குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படவிருப்பதாக போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

எவ்வாறாயினும், அவ்வாறு வெளியான தகவல்களில் உண்மையில்லை என அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கல்கிசை பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...