follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1டொங்காவை தாக்கிய சுனாமி!

டொங்காவை தாக்கிய சுனாமி!

Published on

பசுபிக் நாடான டொங்கா இராச்சியத்தின் கடற்பகுதிக்கு அடியில் நேற்று எரிமலை வெடித்தது.

இதனால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்சைகள் மற்றும் வெளியேற்றல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதுடன், பல தென் பசுபிக் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலையில் சுனாமி எச்சரிக்கைகளை வெளியிட்டது மற்றும் தெற்கில் உள்ள அமாமி தீவுகளில் மூன்று மீட்டர் (9.84 அடி) உயர அலைகள் தாக்கக்கூடும் என்று கூறியது. முன்னதாக அங்கு ஒரு மீட்டருக்கும் அதிகமான அலைகள் தாக்கின.

எனினும் இதனால் காயம் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று ஜப்பானின் பொது ஒலிபரப்பான NHK தெரிவித்தது.

சுனாமி எச்சரிக்கை நீக்கப்படும் வரை மக்கள் கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஜப்பான் அதிகாரிகள் பொது மக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

அதேநேரம் டொங்காவின் தலைநகரமும் கடுமையான சுனாமி அலைகளின் தாக்குதலுக்கு முகங்கொடுத்தது. கடலோர சாலைகளில் அலைகள் பாய்ந்து, சொத்துக்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகள் யாசகம் எடுப்பது தொடர்பான சட்டங்கள் இன்று முதல் கடுமையாக்கப்படும்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்வது மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...

தாய்லாந்தின் பிரதமர் பதவி இடைநீக்கம்

தாய்லாந்தின் பிரதமராக இருந்த பெட்டோங்தார்ன் சினவத்ரா தனது பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவலளிக்கின்றன. இந்த முடிவுக்கு...