follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉலகம்புர்கினா பாசோ நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்!

புர்கினா பாசோ நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்!

Published on

நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதுடன், ஜனாதிபதி ரொச் கபோரேவை பதவியிலிருந்து அகற்றியுள்ளதாக மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவை  (Burkina Faso) இராணுவம் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புச் சீரழிவே இராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற காரணமென அந்நாட்டு இராணுவ அதிகாரியொருவர் அரச தொலைக்காட்சியூடாக தெரிவித்தார்.

ஆயுதக்குழுக்களின் வன்செயல்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாக, பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி கபோரே பாரிய எதிர்ப்பை எதிர்கொண்டு வந்தார்.

இந்தநிலையிலேயே இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், ஜனாதிபதி எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது தௌிவின்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இருப்பினும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பை வௌியிட்ட இராணுவ அதிகாரி கூறினார்.

புர்க்கினோ பாசோ தலைநகரில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வௌிவந்து ஒரு தினத்தின் பின்னர் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுள்ளது

இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகின்றமை காரணமாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியாவில் 32 விமான நிலையங்களுக்கு பூட்டு

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி...

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...