follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉள்நாடுநாட்டில் 90 சதவீதமானோர் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

நாட்டில் 90 சதவீதமானோர் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Published on

நாட்டில் தற்போது பதிவாகியுள்ள கொவிட்-19 நோயாளர்களில் 90 சதவீதமானோர் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வக அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இது 100 வீதமாக அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

ஒமிக்ரோன் மாறுபாட்டின் காரணமாக நாட்டில் பதிவாகும் கொவிட்-19 தொற்றார்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொவிட்-19 தடுப்பூசியின் மூன்று டோஸ்களையும் பெற்றிருந்தால், கடுமையான சிக்கல்கள் மற்றும் இறப்புகளை தவிர்க்கலாம் என்று அறிக்கைகள் வெளிப்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

எனவே இதுவரை கொவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி பெறாத நபர்கள் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...