follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடு17 மாவட்டங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளுக்கு சொகுசு பஸ் சேவை

17 மாவட்டங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளுக்கு சொகுசு பஸ் சேவை

Published on

மகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள 17 மாவட்டங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலைகளுக்கு 25 சொகுசு பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இந்த பஸ்கள் மகும்புரவில் இருந்து மொனராகலை, பதுளை, எம்பிலிப்பிட்டிய, அம்பாறை, அக்கரைப்பற்று, கண்டி, முல்லைத்தீவு, அனுராதபுரம், குருநாகல், மடோல்சிமா, வவுனியா, மட்டக்களப்பு, கதுருவெல மற்றும் கரடுகல ஆகிய பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும்.

மகும்புரவில் இருந்து காலி மற்றும் மாத்தறை வரையிலான பஸ் சேவைகள் இதுவரையில் இயங்கி வருவதாகவும், புதிய பஸ் சேவைகள் கொழும்பில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலை தணிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

மகும்புரா பல்நோக்கு போக்குவரத்து மையம் இந்த நீண்ட தூர சேவைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு வாகனதரிப்பிட வசதிகளையும் வழங்குகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...