follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1கொழும்பு - ஹொரணை வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்!

கொழும்பு – ஹொரணை வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்!

Published on

பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – ஹொரணை வீதியிலுள்ள போக்குந்தர பாலத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தில் அபிவிருத்தி பணிகளின் காரணமாக மீள் அறிவித்தல் வரை காலை 6 மணிமுதல் மாலை 3 மணிவரை கொழும்பை நோக்கி 2 பாதைகளும் ஹொரணையை நோக்கி ஒரு பாதையும் , மாலை 3 மணிமுதல் காலை 6 மணிவரை கொழும்பை நோக்கி ஒரு பாதையும் ஹொரணையை நோக்கி 2 பாதையும் என்ற அடிப்படையில் வாகன போக்குவரத்து வரையறை செய்யப்பட்டுள்ளது.

மேலும், காலை 6 மணி முதல் காலை 9 மணிவரை மற்றும் மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை பஸ் போக்குவரத்து தவிர ஏனைய சகல கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறும் காலப்பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்த்துக் கொள்வதற்காக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸாா் பொது மக்கள் மற்றும் சாரதிகளிடம் கோரியுள்ளனா்.

அதற்காக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மாற்று வீதிகளாக பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

1. ஹொரணையிலிருந்து கொழும்பை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் பிலியந்தல, கட்டுபெத்த பிரதேசத்தினூடாக காலி வீதிக்கு பிரவேசித்து கொழும்பை நேக்கி பயணிக்க முடியும்.

2. ஹொரணையிலிருந்து வேரஹெர வரை பயணிக்கும் வாகனங்கள் காலி வீதியினூடாக இரத்மலானை, பொருபன வீதியினூடாக வேரஹெர வரை பயணிக்க முடியும்.

3. கொழும்பிலிருந்து ஹொரணை வரை பயணிக்கும் வாகனங்கள் பொரலஸ்கமுவயிலிருந்து மஹரகமவுக்கு வந்து மஹரகமவிலிருந்து பிலியந்தலவினூடாக பயணிக்க முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...