follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடு12 இந்திய மீனவர்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவு

12 இந்திய மீனவர்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவு

Published on

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி இரணைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை (28) மன்றில் முன்னிலையாக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மீனவர்கள் தொடர்பான வழக்கு, கிளிநொச்சி நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றைய தினம் மீனவர்கள் மன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பதுடன், மீனவர்கள் சார்பில் இந்திய தூதரக அதிகாரியொருவர் சட்டத்தரணியூடாக ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில், குறித்த 12 மீனவர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை மன்றில் முன்னிலையாக்குமாறு கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அதிகாரிகளுக்கு நீதிபதியால் உத்தரவிடப்பட்டது.

Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 12 இந்திய மீனவர்களை கிளிநொச்சி இரணைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினர் கடந்த 12 ஆம் திகதி இரவு கைது செய்தனர்.

இவர்களது 2 ட்ரோலர் படகுகளும் கடற்படையினரால் இதன்போது கைப்பற்றப்பட்டன.

இராமேஸ்வரத்தை சேர்ந்த இந்திய மீனவர்களே கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...

கடந்த 6 மாதங்களில் ஒரு டிரில்லியனைத் தாண்டியது சுங்கம்

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுங்க வருவாய் ஒரு டிரில்லியனைத் தாண்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி...

கஹவத்தை பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் பதற்றம்

கஹவத்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கைத் தொடர்ந்து பொலிஸாருக்கு பிரதேசவாசிகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த...