follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுநீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை நகரங்களுக்கு பூட்டு

நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை நகரங்களுக்கு பூட்டு

Published on

நாட்டின் சில நகரங்கங்களின் வர்த்தக நிலையங்களை இன்றைய தினம் முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிளிநொச்சி பொதுச்சந்தை இன்றைய தினம் முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
கரைச்சி பிரதேச சபைத்தவிசாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தை இன்று முதல் எதிர்வரும் 7 தினங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் சிலருக்கு கொவிட்19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை நகரங்கள் நாளைய தினம் முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் மூடப்படவுள்ளன.

வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், நீர்கொழும்பு நகர சபைத்தலைவர் தயான் லான்ஷாவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க உள்ளிட்ட மூன்று...

ஊழலுக்கு எதிரான பணிகளுக்காக இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய ஜப்பான்

ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும், பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத்...

தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான அறிவித்தல்

சுயதொழில் மூலம் தொழில்துறை மற்றும் நிறுவனத் துறைகளில் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளியின் வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தை...