follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுகச்சா எண்ணெய் விலை பற்றிய முன்னறிவிப்பு

கச்சா எண்ணெய் விலை பற்றிய முன்னறிவிப்பு

Published on

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 115 டொலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருளின் விலைகள் ஏறக்குறைய இரண்டு பவுண்டுகளால் அதிகரிக்கப்படும் என இங்கிலாந்தும் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார். இதன்காரணமாக  இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படும் எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே முன்னாள் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் தோல்விக்கு முகங்கொடுக்கும் நிலையில் தற்போது மக்கள் மாற்று வழியை தேடிக்கொண்டிருப்பதாகவும் சர்வதேசத்தின் உதவியோடு ஐக்கிய தேசியக் கட்சியே முன்னோக்கிச் செல்லக்கூடிய ஒரே தெரிவு என்பதை மக்கள் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் திரு.விக்கிரமசிங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...

அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி...