follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1மேல் மாகாண கொவிட் நோயாளர்களுக்கு இன்று முதல் விசேட SMS இலக்கம் அறிமுகம்

மேல் மாகாண கொவிட் நோயாளர்களுக்கு இன்று முதல் விசேட SMS இலக்கம் அறிமுகம்

Published on

கொரோனா நோயாளர்களின் நோய் தன்மைக்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்தி சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புதல் மற்றும் வீடுகளில் வைத்து முகாமை செய்தல் ஆகியவற்றுக்காக மேல் மாகாணத்தை உள்ளடக்கும் வகையில் புதிய முறைமை ஒன்று கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று முதல் அமுலாகும் வகையில் துரித அழைப்பு மற்றும் குறுந்தகவல் சேவை முறைமை ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது.

அதற்கமைய நோயாளிகள் கீழ்வரும் தகவல்களை உள்ளீடு செய்து 1904 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்க முடியும்.

சுவாசக் கோளாறுகளை கொண்டுள்ள நோயாளர்கள் A எனவும் காய்ச்சல் கொண்டுள்ள நோயாளர்கள் B எனவும் எவ்வித நோய் அறிகுறிகளும் கொண்டிராத நபர்கள் C எனவும் குறிப்பிட்டு சிறிய இடைவெளிவிட்டு வயது (இடைவெளி) தேசிய அடையாள அட்டை எண் (இடைவெளி) முகவரி என்பவற்றை உள்ளீடு செய்து மேற்கண்ட இலக்கத்துக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறுந்தகவல் ஊடாக கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைய கொவிட் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம், நோயாளர்களை சிகிச்சை மையங்களுக்கு அனுப்புவது தொடர்பில் மருத்துவர்களுக்கு அறிவிக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...