follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉலகம்பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டுத் தாக்குதல் : 30 பேர் பலி

பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டுத் தாக்குதல் : 30 பேர் பலி

Published on

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடித்ததில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு பொலிஸார்  தெரிவித்தனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த மசூதிக்குள் இரண்டு தாக்குதல்காரர்கள் நுழைய முயன்ற நிலையில், காவலுக்கு நின்ற பொலிஸார்  இருவரை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த ஒரு காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார்.

மற்றைய அதிகாரி பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து, பள்ளிவாசலுக்குள் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பொலிஸார்  சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது...