follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுவாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடு : கடந்த ஆண்டு 27,000 வாகனங்கள் இறக்குமதி

வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடு : கடந்த ஆண்டு 27,000 வாகனங்கள் இறக்குமதி

Published on

மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாக இறக்குமதிக்கான உற்பத்தி வரி 49.1 பில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இந்த வருமான இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ள போதிலும், கடந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 26953 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் 22779 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அண்மையில் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் 72 கார்கள், 4 பஸ்கள், 2002 முச்சக்கர வண்டிகள், 1110 மோட்டார் சைக்கிள்கள், லொறிகள் உட்பட 1744 சரக்கு வாகனங்கள், 12877 தரை வாகனங்கள் மற்றும் 9144 இரட்டை நோக்க வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...