follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுஅரச நிறைவேற்று அதிகாரிகள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

அரச நிறைவேற்று அதிகாரிகள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

Published on

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசின் நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்புக்கு சொந்தமான மற்றும் இணை சேவைகளில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் பல இணைந்து இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளன.

சம்பள கொள்கையை மீறி தெரிவுசெய்யப்பட்ட சேவைகளுக்கு மாத்திரம் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றமை, பதவி உயர்வு செயன்முறையில் காணப்படும் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

அரச சேவை பொறியியலாளர்கள் சங்கம், அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கம், உள்நாட்டு இறைவரி தொழிற்சங்க ஒன்றியம், தொழில் ஆணையாளர்களின் சங்கம், கல்வி நிர்வாக சேவை தொழிற்சங்க ஒன்றியம் உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இன்று  காலை 10 மணியளவில் கோட்டை ரயில் நிலைய முன்றலில் எதிர்ப்பில் ஈடுபடவுள்ளதாக அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...

அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி...