follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉள்நாடுசுரங்க அகழ்வாராய்ச்சிக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்க தற்காலிக தடை

சுரங்க அகழ்வாராய்ச்சிக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்க தற்காலிக தடை

Published on

சுரங்க அகழ்வாராய்ச்சிக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த அகழ்வாராய்ச்சிகளால் பாரியளவில் சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படும் அறிக்கைகளே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.

அகழ்வுப் பணிகளினால் அம்பலாந்தோட்டை – வலேவத்தை கிராமம் முற்றாக அழிவடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.அத்துடன், விவசாயம் செய்யக்கூடிய வயல் நிலங்களும் பொருளாதார ரீதியில் பயன்தரக்கூடிய தென்னை போன்ற பயிரிடப்பட்ட நிலங்களும் அழிந்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.

இதன் காரணமாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் விசேட குழுவொன்றை நியமித்து, விரிவான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தெரிவித்தார்.

அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...