follow the truth

follow the truth

June, 3, 2025
Homeஉள்நாடுசமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரிக்க கோரிக்கை

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரிக்க கோரிக்கை

Published on

லிட்ரோ நிறுவனமானது  சாதாரண உணவகங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 850 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளது. 

கடன் கடிதத்தை பெறுவது, கப்பல் கட்டணம் மற்றும் டொலர் பெறுமதி உள்ளிட்ட தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலமைகளை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை லிட்ரோ நிறுவனம் அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்காத  லிட்ரோ நிறுவனம், கடன் கடிதம் வழங்கப்பட்ட பின்னர் கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்திருந்த நிலையில் நேற்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்தில் 2 இலட்சம்  எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகித்ததுள்ளது. 

இந்நிலையிலேயே விலை அதிகரிப்புக்கான கோரிக்கையை அந்நிறுவனம் முன் வைத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [நேரலை]

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

புறா தீவு கடல் பரப்பை சுத்தம் செய்யும் பணி திருகோணமலையில் ஆரம்பம்

திருகோணமலை புறா தீவுப் பகுதியில் இன்று (02) கடல் பரப்பை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு...

எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது – கோப் குழுவில் புலப்பட்டது

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும்...