follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுவடக்கு மக்களை பாதுகாத்து அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துகின்றோம் – மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு மக்களை பாதுகாத்து அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துகின்றோம் – மஹிந்த ராஜபக்ஷ

Published on

கடந்த காலத்தை போன்றே வடக்கு மக்களை இன்றும் பாதுகாத்து வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தி வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதன்படி வடக்கில் அபிவிருத்தி பணிகளை விரிவுப்படுத்த ஜனாதிபதியும், அரசாங்கம் பொறுப்புடன் செய்யப்பட்டுவருவதாகவும் கூறினார்.

இலங்கையில் வாழும் பல்லின சமூகத்தினர் மத்தியில் வரலாற்று காலம் முதல் நல்லுறவு பேணப்பட்டுள்ளது என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நாகதீப விகாரையில் நேற்று இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கில் சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட அடையாளங்களை பாதுகாக்கவும், அபிவிருத்தி செய்யவும் பௌத்த தேரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள் என கூறினார்.

30 வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாட்டில் எப்பகுதிக்கும் சுதந்திரமாக செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...