follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடு22 தமிழக மீனவர்களுகளுக்கு விடுதலை

22 தமிழக மீனவர்களுகளுக்கு விடுதலை

Published on

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்களும் நிபந்தனைகளுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – காரைநகரை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களும் கடந்த மாதம் 24ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, அவர்களின் 2 விசைப்படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

அதனையடுத்து மீனவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த மீனவர்களை மார்ச் மாதம் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 10 ஆம் மீண்டும் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது 22 மீனவர்களையும் மார்ச் மாதம் 23 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் சிறையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர்களுக்கு எதிராக 3 குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதவான் 3 குற்றச் சாட்டுக்களுக்கும் தலா 6 மாதம் சதாரண சிறைத் தண்டணையும், 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து நிபந்தனையின் அடிப்படையில் – செய்து உத்தரவிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...