follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுபுதுவருடத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

புதுவருடத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

Published on

எதிர்வரும் புது வருடத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்பவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திட்டத்தின் கீழ் 24 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில் விசேட நடவடிக்கை பிரிவொன்றை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தரமான பஸ் சேவையை முன்னெடுத்துச் செல்வதற்கென நடமாடும் கண்காணிப்பு அதிகாரிகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புத்தாண்டு காலத்தில் பஸ் வண்டிகளில் சன நெரிசலை குறைக்கும் வகையில் பஸ் சேவை முன்னெடுக்கப்படும்.

பயணிகளின் பாதுகாப்பு , உணவு, நீர் மற்றும் சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட பொது வசதிகள் குறைவின்றி வழங்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடவத்தை மற்றும் கடுவெல, பஸ் முனையங்கள் மற்றும் மாகும்புற பல்நோக்கு இடைமாற்று மத்திய நிலையத்திலும் குறித்த காலப்பகுதியில் அவ்வாறான சேவை மற்றும் வசதிகள் வழங்கப்படும். இரண்டாவது கட்டத்தின் கீழ் கொழும்பு மற்றும் சன நெரிசல் மிக்க பிரதேசங்களுக்கு மீள வருகை தரும் போது பயணிகளின் கேள்விகளை கருத்திற்கொண்டு தற்காலிக அனுமதி பத்திரத்தின் கீழ் பஸ் சேவையை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிலியந்தலையில் குப்பை மேட்டில் தீ விபத்து

பிலியந்தலையில் உள்ள கரதியான குப்பை மேட்டில் இன்று (08) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தின்...

வைத்தியர் மஹேஷி விஜேரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஜூன் மாதத்திற்கான வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கையின் படி, ஜூன் 2025-இல்...