follow the truth

follow the truth

August, 26, 2025
HomeUncategorizedமக்கள் வரிசையில்! – கவலையில் சமல் ராஜபக்ச

மக்கள் வரிசையில்! – கவலையில் சமல் ராஜபக்ச

Published on

“நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ அல்லது பிரதமர் மஹிந்த ராஜபக்சவோ அல்லது நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவோ பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே மிகவும் அவசியம்.”என அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“என்னால் இன்னும் கிராமத்துக்குச் செல்ல முடிகின்ற போதிலும் மக்கள் வரிசையில் நிற்பதைக் கண்டு நான் வருத்தமடைகின்றேன்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசியலிலுள்ள எவரும் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே மிகவும் அவசியம்.

தற்போதய டொலர் நெருக்கடியை , எண்ணெய் மற்றும் எரிவாயு வரிசையில் நிற்கும் மக்கள் நன்கு அறிந்திருந்த போதிலும் அதற்கு அரசு வழங்கும் பதில்கள் போதுமானதாக இல்லை.

எனவே, அரசிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு விரைந்து தீர்வு காணவேண்டும்” – என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை...

ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள், ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை என அறிவித்துள்ளன. 🔹...

காமெய்னி கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பரபரப்பு பேட்டி

ஈரானுடனான 12 நாள் போரின் போது, அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமெய்னியை கொலை செய்ய குறிவைத்ததாக...