follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுசட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்த 68 பேர் கைது!

சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்த 68 பேர் கைது!

Published on

சட்டவிரோதமான முறையில் பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே எரிபொருள் சேகரிப்பு மற்றும் விற்பனை பிரதானமாக அனுமதிக்கப்பட்டுள்ளதால், எரிபொருளை வைத்து தனியாருக்கு விற்பனை செய்வது சட்டவிரோதமானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான எரிபொருள் இருப்புக்களை சேகரித்து விற்பனை செய்த இரண்டு குழுக்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்த 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களிடம் இருந்து 8025 லீற்றர் பெற்றோல் மற்றும் 726 லீற்றர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...

கடந்த 6 மாதங்களில் ஒரு டிரில்லியனைத் தாண்டியது சுங்கம்

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுங்க வருவாய் ஒரு டிரில்லியனைத் தாண்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி...