உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களை நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள், இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படும்
இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூருகின்ற இந்த விழாவின்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.