புதிய அமைச்சரவை இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் மாத்திரமே உள்ளடங்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கடந்த 3ஆம் திகதி இரவு முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்ததுடன், மறுநாள் நிதி, வெளிவிவகார, கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்து பாராளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் பணிகளை வழமை போன்று முன்னெடுத்தார்.
புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் குழுவும் உள்ளடங்கும், அவர்கள் அனைவரும் இளம் எம்.பி.க்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.