follow the truth

follow the truth

July, 3, 2025
HomeUncategorizedஜனாதிபதியால் மாத்திரமே சிரித்துக்கொண்டு மனித படுகொலை செய்ய முடியும் - அனுர குமார திசாநாயக்க...

ஜனாதிபதியால் மாத்திரமே சிரித்துக்கொண்டு மனித படுகொலை செய்ய முடியும் – அனுர குமார திசாநாயக்க (VIDEO)

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாட்டு மக்கள் மீது எவ்விதமான அக்கரையும் இல்லையெனவும், அவரால் மாத்திரமே சிரித்துக்கொண்டே மனித படுகொலை செய்ய முடியுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நாட்டு மக்கள் இன்று ஒருவேளை உணவின்றி பட்டினியால் வாடி வருகின்றனர். ஆனால் இந்த அரசுக்கு அதைப்பற்றி கவலையில்லை. வீதியில் போராட்டத்திற்கு வரும்போது அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

பட்டினியால் ஏற்பட்டுள்ள வேதனையே இன்று இவ்வாறு போராட்டமாக வெடித்துள்ளது. மக்களின் போராட்டம் சாதாரணமானது, அவர்களது கோபமும் நியாயமானது. நாளை பிரச்சினை தீருமா, அல்லது நாளை மறுதினம் தீருமா என்று மக்கள் தினமும் சிந்தித்து வருகின்றனர்.

தயவு செய்து மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதை உடனடியாக நிறுத்துங்கள். துப்பாக்கி ஊடாக எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. எனவே அனைத்து பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் அனுரகுமார திசாநாயக்க எம்.பி இதன்போது தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள், ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகள் எதிலும் மாற்றமில்லை என அறிவித்துள்ளன. 🔹...

காமெய்னி கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பரபரப்பு பேட்டி

ஈரானுடனான 12 நாள் போரின் போது, அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமெய்னியை கொலை செய்ய குறிவைத்ததாக...

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதி பிரகடனம்

பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும்...