follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுசபாநாயகர் பொய்யுரைக்கிறார் - சஜித் பிரேமதாஸ (VIDEO)

சபாநாயகர் பொய்யுரைக்கிறார் – சஜித் பிரேமதாஸ (VIDEO)

Published on

ஜனாதிபதி பதவி விலக தீர்மானித்துள்ளதாக, சபாநாயகருக்கு அறிவித்துள்ளார் என சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

113 பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு ஆட்சியை கையளிக்க தயாரென ஜனாதிபதி முன்னதாக அறிவித்திருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லையென சபாநாயகர் தெரிவித்தார்.

இதனை தொடர்பில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கட்சத் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்ன முன்னிலையில் கூறிய ஒரு விடயத்தை சபாநாயகர் தற்போது பொய்யானது என்றும் மறுக்கிறார்.

எனவே, சபாநாயகர் பொய்யுரைக்கிறார் என்றே நான் கூறவேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதன்போது, கருத்துவெளியிட்ட சபாநாயகர், அது தொடர்பில் சஜித் பிரேமதாஸ தவறான புரிதலை கொண்டுள்ளதாகவும், அவர் அதனை திரிபுபடுத்திக் கூறுவதாகவும் தெரிவித்தார்.

இதனை மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித், தொடர்ந்தும் சபாநாயகர் பொய்யுரைப்பதாகவும், அவர் கூறிய விடயத்தையே தான் இங்கு எவ்வித திரிபும் இன்றி முன்வைத்தேன். தற்போது அதனை மாற்றிக்கூறும் நீங்கள் சபாநாயகர் அல்ல பொய்யர். ஆசனத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபடவேண்டாம் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...

அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி...