follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்20 நாளில் இருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்

20 நாளில் இருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்

Published on

ஸ்பெயினில் 31 வயதான பெண்ணொருவருக்கு 20 நாட்களுக்குள் இரண்டு முறை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நபருக்கு அடுத்தடுத்து இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இதுவரை அறியப்பட்ட குறைந்தபட்ச கால இடைவெளி இதுவே என்று ஸ்பெயினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுகாதார பணியாளரான அந்த பெண்ணுக்கு கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் டெல்டா திரிபாலும், ஜனவரியில் ஒமிக்ரான் திரிபாலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்பெயினை சேர்ந்த அந்த பெண்ணுக்கு முதல் முறையாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டபோது எவ்வித அறிகுறியும் தென்படவில்லை எனவும் ஆனால், சுமார் மூன்று வாரங்களுக்கு பிறகு அவருக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே அவர் வெவ்வேறுபட்ட கொரோனா திரிபால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...