follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1பொருளாதார நெருக்கடி: மத்திய வங்கியின் கோரிக்கை

பொருளாதார நெருக்கடி: மத்திய வங்கியின் கோரிக்கை

Published on

அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்க வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

இந்த அந்நிய செலாவணி நன்கொடை மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று மத்திய வங்கி தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்நியச் செலாவணி பெறுகைகள் மற்றும் அவற்றின் பயன்பாடு என்பவற்றை  வெளிப்படைத் தன்மையை பேணுவதற்காக மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றையும் மத்திய வங்கியின் ஆளுநர் நியமித்துள்ளார்.

நன்கொடைகள் தொடர்பான தகவல்களை fdacc@cbsl.lk என்ற மின்னஞ்சல் மூலம் அல்லது 076 83 15 782 என்ற இலக்கத்திற்கு WhatsApp க்கு அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை போக்குவரத்து வேன் கட்டணம் குறித்து அறிவித்தல்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்க தலைவர் மல்ஸ்ரீ...

பிள்ளைகள் யாசகம் எடுப்பது தொடர்பான சட்டங்கள் இன்று முதல் கடுமையாக்கப்படும்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்வது மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...