follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுஇலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9% வீழ்ச்சி

இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9% வீழ்ச்சி

Published on

இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் குறைவடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

9% வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சபை கூறியுள்ளது.

கடந்த வருடம் முதல் காலாண்டில் 69.8 மில்லியன் கிலோகிராம் தேயிலை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வருடம் குறித்த காலப்பகுதியில் 63 மில்லியன் கிலோகிராம் தேயிலையே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

உரப்பிரச்சினை, ரஷ்ய – உக்ரைன் மோதல் மற்றும் காலநிலை மாற்றம் என்பன தேயிலை ஏற்றுமதியில் தாக்கம் செலுத்தியுள்ளதாக சபை கூறியுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது வழமையான ஏற்றுமதிக்கு திரும்பியுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடத்தில் தேயிலை ஏற்றுமதியூடாக1.3 பில்லியன் ரூபா வருமானம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...

நாட்டில் உப்பு தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக்...