follow the truth

follow the truth

August, 25, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை தொடரும்

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை தொடரும்

Published on

லங்கா ஐ.ஓ.சி, சிபெட்கோ மற்றும் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக சுவசேரிய பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எரிபொருள் நெருக்கடி உண்மையில் ஒரு சவாலாகும், ஆனால் லங்கா ஐஓசி, சிபெட்கோ மற்றும் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் எங்களால் இதை சமாளிக்க முடிந்தது.

இதுவரை, எங்களின் ஆம்புலன்சுகளுக்கான எரிபொருளை சிரமமின்றி பெற்று வந்துள்ளோம்.

எமது செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் நடைபெறுவதால், எரிபொருளைப் பெறுவதற்கு கடினமாக உள்ள பகுதிகளில், இலங்கை இராணுவம் எமக்கு மிகவும் உதவியாக இருந்தது என சுவசேரிய பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...