லங்கா ஐ.ஓ.சி, சிபெட்கோ மற்றும் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக சுவசேரிய பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எரிபொருள் நெருக்கடி உண்மையில் ஒரு சவாலாகும், ஆனால் லங்கா ஐஓசி, சிபெட்கோ மற்றும் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் எங்களால் இதை சமாளிக்க முடிந்தது.
இதுவரை, எங்களின் ஆம்புலன்சுகளுக்கான எரிபொருளை சிரமமின்றி பெற்று வந்துள்ளோம்.
எமது செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் நடைபெறுவதால், எரிபொருளைப் பெறுவதற்கு கடினமாக உள்ள பகுதிகளில், இலங்கை இராணுவம் எமக்கு மிகவும் உதவியாக இருந்தது என சுவசேரிய பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.