follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுமதத்தலைவர்கள் கொலைகளை தடுக்கவுமில்லை, கண்டிக்கவுமில்லை! - மஹிந்த ராஜபக்ச

மதத்தலைவர்கள் கொலைகளை தடுக்கவுமில்லை, கண்டிக்கவுமில்லை! – மஹிந்த ராஜபக்ச

Published on

அமரகீர்த்தி அதுகோரல எம்.பியின் கொலை சம்பவத்தை தொடர்ந்து இந்த பாராளுமன்றத்தின் எம்.பிக்கள் மரண அச்சத்துடனேயே வீதியில் செல்கின்றனர் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல தொடர்பான அனுதாப பிரேரணை மீது பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துதெரிவித்த அவர் பொருளாதார நெருக்கடியால் மக்களிடம் வேதனை மற்றும் அதிருப்தி நிலைமை உருவாகியுள்ளது என்பது உண்மையே! ஆனால் அது கொலை, வீடுகளுக்கு தீ வைத்தல் போன்ற சம்பவங்கள் வரையில் செல்வதற்கு காரணம் இதன் பின்னால் இருந்து சிலர் செயற்படுவதனாலேயே ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அன்று போராட்டக் களத்தில் இருந்த மதத் தலைவர்கள் கூட இந்த கொலைகளை தடுக்க முயற்சிக்கவில்லை. அதனை கண்டிக்கவும் இல்லை. இதனை கூறுவதற்கும் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர் என்று அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...

அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி...