follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுகமல் குணரத்னவிடம் வாக்குமூலம் பதிவு

கமல் குணரத்னவிடம் வாக்குமூலம் பதிவு

Published on

மைனாகோகம, கோட்டாகோகம உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கை எடுத்தார்களா என்பதை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன ஆஜராகியுள்ளார்.

இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் அமைச்சர்களான சன்ன ஜயசுமன மற்றும் டொக்டர் ரமேஷ் பத்திரன ஆகியோரிடமும் ஆணைக்குழு நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளது.

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

தற்போது வரை சுமார் 30 அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட தலைமையிலான இந்த ஆணைக்குழு, ஜனாதிபதியினால் அண்மையில் நியமிக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்த தீர்மானம்

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் அதிகரிக்கப்படும்

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபா...

தம்மிக்க பெரேராவிடமிருந்து மட்டக்களப்பிற்கு 3 IT வளாகங்கள்

உலகில் வளர்ந்த ஒவ்வொரு நாட்டின் கல்வியும் மேம்பட்ட நிலையில் இருப்பதால், கல்வி மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என...