follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுவீடுகளில் குழந்தை பிரசவிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு!

வீடுகளில் குழந்தை பிரசவிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு!

Published on

கடந்த சில தினங்களுக்குள் நாடளாவிய ரீதியில் வீடுகளில் குழந்தை பிரசவிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக அரச குடும்பநல சுகாதார சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் பிரச்சினை காரணமாக வைத்தியசாலைகளுக்கு செல்வதில் ஏற்பட்டுள்ள அசௌகரிய நிலை மற்றும் பொருளாதார பிரச்சினை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதென அந்த சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இதன்படி கடந்த 2 தினங்களில் நிகவெரட்டிய, பிட்டகோட்டே மற்றும் முகத்துவாரம் முதலான பிரதேசங்களில் இதுபோன்ற சில சம்பவங்கள் பதிவாகின.

எவ்வாறிருப்பினும் குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் இந்த பிரசவங்கள் இடம்பெற்றுள்ளதானால் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அரச குடும்ப நல சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தீபிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐ.ம.சக்தியின் சுசில் குமாரவின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார...

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம்

பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பொலிஸ் விசேட...

கொலன்னாவ நகர சபையின் அதிகாரம் NPP வசம்

கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (18) காலை கூடிய கொலன்னாவ நகர சபைக்கான...