follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுபத்திரிகை விநியோகப் பணிகள் வரையறைக்குள்

பத்திரிகை விநியோகப் பணிகள் வரையறைக்குள்

Published on

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் பத்திரிகை விநியோகப் பணிகள் வரையறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்புக்கு அப்பாலுள்ள சில பகுதிகளில், கடந்த சில நாட்களாக பத்திரிகை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் இன்மையால், கொழும்பின் சில பகுதிகளில், இன்றைய தினம் பத்திரிகை விநியோகிக்கப்படவில்லை என, பத்திரிகை விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகை அச்சிடப்பட்ட பின்னர், கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு, குறித்த நிறுவனங்களின் போக்குவரத்து சேவை ஊடாக நேரடியாக விநியோகிக்கப்படுவதுடன், அங்கிருந்து ஏனைய பகுதிகளுக்கு தனியார் வாகனங்கள் மூலம் பத்திரிகை விநியோகிக்கப்படும்.

இந்தப் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் கடந்த நாட்களில் சிக்கல் ஏற்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் அந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலைமை நீடித்தால், அடுத்த வாரம் முதல் பத்திரிகை விநியோகப் பணிகள் முழுமையாக முடங்கும் என பத்திரிகை விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐ.ம.சக்தியின் சுசில் குமாரவின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார...

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம்

பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பொலிஸ் விசேட...

கொலன்னாவ நகர சபையின் அதிகாரம் NPP வசம்

கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (18) காலை கூடிய கொலன்னாவ நகர சபைக்கான...