follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுசமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது : மஹிந்த நலமுடன் உள்ளார்!

சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது : மஹிந்த நலமுடன் உள்ளார்!

Published on

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என அவரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் இன்று பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இது தொடர்பில் முன்னாள் பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவிடம் வினவியபோது, ​​குறித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவித்தார்.

அத்துடன், முன்னாள் பிரதமர் நலமுடன் இருப்பதாகவும், தனது அன்றாடப் பணிகளை எந்தவித இடையூறும் இன்றி அவர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...