follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇன்று 8 – 10 சதவீத தனியார் பஸ்களே சேவையில்

இன்று 8 – 10 சதவீத தனியார் பஸ்களே சேவையில்

Published on

நிலவும் எரிபொருள் நெருக்கடியால், இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் 8 முதல் 10 சதவீதத்திற்கு இடைப்பட்ட அளவில் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சாலைகளில், தனியார் பஸ்களுக்கு எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பிரதேசங்களில் எரிபொருள் விநியோகிகப்படாத காரணத்தால், அதிகளவான பஸ்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், கருத்து வெளியிட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை, உச்சபட்ச அளவில் தங்களது பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், பஸ்கள் உரியவாறு சேவையில் ஈடுபடாமையால், இன்றைய தினமும் பயணிகள் பெரும் அசௌரியங்களை எதிர்நோக்கி உள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...