follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதற்போதைய அரசாங்கத்திற்கு அறிவும், திறமையும் இல்லை! - மைத்திரி

தற்போதைய அரசாங்கத்திற்கு அறிவும், திறமையும் இல்லை! – மைத்திரி

Published on

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு அரசாங்கத்திற்கு திறமையும், அறிவும் இல்லை. அதனால் ஆளும் தரப்பினை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மகாசங்கத்தினரின் வழிகாட்டுதலின்படி விரைவில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு அமைக்கப்படாவிட்டால் இலங்கையில் கலவரங்கள் மற்றும் போராட்டங்கள் உக்கிரமடைவதை தடுக்கமுடியாது என அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்து சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வழி செய்ய வேண்டும் என அவர் குறித்த ஊடகசந்திப்பில் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...