follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுபிரதமரின் திட்டமும் சாத்தியமற்றது - ஹர்ஷ டி சில்வா

பிரதமரின் திட்டமும் சாத்தியமற்றது – ஹர்ஷ டி சில்வா

Published on

பிரதமர் உறுதியளித்த போதிலும் ஓகஸ்ட் மாதத்திற்குள் நாட்டின் கடன்களை மறுசீரமைக்க முடியாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையை மேற்கோள்காட்டி கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஆறு மாத காலத்திற்குள் நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்ய அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட திட்டம் நடைமுறைக்கு மாறானது என பிரதமர் கூறினார்.

அவ்வாறு என்றால் பிரதமரால் முன்வைக்கப்பட்ட திட்டம் நிறைவேற்றப்பட்டால் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கக்கூடிய ஒன்று என ஹர்ஷ டி சில்வா சாடினார்.

ஓகஸ்ட் மாதத்திற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளன நிலையில் இந்த கடனை மூன்று வாரங்களில் மறுசீரமைக்க முடியும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...