follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇலங்கை அகதிகளை மீட்குமாறு இந்திய மீனவர்கள் கோரிக்கை

இலங்கை அகதிகளை மீட்குமாறு இந்திய மீனவர்கள் கோரிக்கை

Published on

இலங்கையிலிருந்து வரும் அகதிகளை மீட்க தனுஷ்கோடியில் கரையோர பொலிஸாரின் ரோந்துப் படகுகளை நிறுத்த வேண்டும் என இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அகதிகளாக வரும் பெரும்பாலானோர் தனுஷ்கோடி அருகே உள்ள மணல் தீடைகளில் இறங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரையோர பொலிஸாருக்கு சொந்தமான படகுகள் தனுஷ்கோடியில் ரோந்து செல்லவும் இலங்கையிலிருந்து வரும் அகதிகளை மீட்கவும் தனுஷ்கோடி படகுகள் இறங்குதளத்தில் நிறுத்தப்பட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் இந்தியாவில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...