follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநாளை தீர்மானமிக்க கட்சித் தலைவர்கள் கூட்டம்

நாளை தீர்மானமிக்க கட்சித் தலைவர்கள் கூட்டம்

Published on

எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானமிக்க கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை முற்பகல் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

பதில் ஜனாதிபதி ஒருவரை நியமித்தல் மற்றும் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குதல் என்பன தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இன்றைய தினம் பல கட்சிகள் ரகசிய கலந்துரையாடல்களை நடத்துகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறுகிறது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் தலைமையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜே.வி.பியும் இன்று முற்பகல் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...