follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார் சஜித்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார் சஜித்

Published on

நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவிற்கான தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினை அவர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி பதவிக்கு மும்முனை போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆளுங்கட்சியின் சார்பில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி பதவிக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்வார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளின் சார்பில் டளஸ் அழகப்பெருமவை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

‘டளஸ் ஜனாதிபதி, சஜித் பிரதமர்’ என்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி பதவிக்கு இரு முனை போட்டியே நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டளஸ் மற்றும் சஜித் தரப்பு ஓரணியில் இணைந்து களமிறங்காவிட்டால், ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க இலகுவில் வெற்றிபெறுவதற்கான சாத்தியமே அதிகளவில் காணப்படுகின்றது.

இந்தநிலையிலேயே ஜனாதிபதி தெரிவிற்கான தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...