follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுதகுதியான ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் - நசீர் அஹமட்

தகுதியான ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் – நசீர் அஹமட்

Published on

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் 60 வீதமானோரின் ஆதரவைப் பெற்று புதிய ஜனாதிபதி தெரிவாகியிருப்பது, தாய் நாட்டின் கீர்த்தியை சர்வதேசத்தில் உயர்த்தியிருப்பதாக சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தேவையான நேரத்தில் தகுதியான ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப வழங்கப்பட்ட சந்தர்ப்பமாகவே இதனை தாம் பார்ப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் நசீர் அஹமட், படுகுழிக்குச் சென்றுள்ள நாட்டின் பொருளாதாரத்தை  தூக்கி நிமிர்த்த சர்வதேசத்தின் உதவிகளே தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசத்தில் புதிய ஜனாதிபதிக்குள்ள கீர்த்தியாலும் ஜனநாயகத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையாலும் உதவிகளைப் பெற முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட...

AI இன் புதிய Trend

AI தொழில்நுட்பம் என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும், இது உலகின் பல துறைகளை ஆக்கிரமித்துள்ளது மற்றும் AI Avatar...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தீர்மானம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை இன்று (15) முதல் தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட...